I would like to support Village Service Project
VSP at MARUNGOOR Village
Started on February 18, 2017 Sponsored by WCSC, Located in Thirunelveli zone, Dividion in WCSC Villages
கிராமத்தின் பெயா் - மருங்கூர்
மாவட்டம் - கன்னியாகுமாரி
துவக்க விழா
உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் 83 வது கிராமமாக திருநெல்வேலி மண்டலம் கன்னியாகுமாரி மாவட்டம் மருங்கூர் கிராமத்தில் 18.02.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் WCSC திருநெல்வேலி மண்டலத்தின் செயலாளர் அருள்நிதி.A.இராமசாமி அவா்கள் வரவேற்புரையாற்றினார். . விரிவாக்க இயக்குனா்–செயலா் அருள்நிதி.V.P.முருகானந்தம் அவா்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். WCSC திருநெல்வேலி மண்டலத்தின் தலைவா் அருள்நிதி.A.அண்ணாமலையார் அவர்கள், முன்னிலையுரையாற்றினார். மருங்கூர் கிராமம் திரு. நெப்போலியன் அவர்கள், WCSC விரிவாக்கம், இணை இயக்குனர்(VSP) பேரா.K.R.சண்முகம் அவா்கள், நாகர்கோவில் மனவளக்கலைமன்றம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் அருள்நிதி.N.நாகலிங்கம் அவர்கள், பேரூராட்சி முன்னாள் தலைவர் திரு.A.செல்லப்பன் அவர்கள், சமூக ஆர்வலர் திரு.N.பழனி அவர்கள், திரு.N.இராமசந்திரன் அவர்கள், 9வது வார்டு முன்னாள் உறுப்பினர் திரு.N.தாணப்பன் அவர்கள், 10வது வார்டு முன்னாள் உறுப்பினர் திருமதி.S.பிரமிளாதாஸ் மற்றும் 11வது வார்டு முன்னாள் உறுப்பினர் திருமதி.S.சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமாரி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சோ. இளங்கோ B.Sc., அவா்கள் தலைமையுரையாற்றினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ அருள்நிதி.SKM.மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC திருநெல்வேலி மண்டலத்தின் துணைத் தலைவர் (VSP) அருள்நிதி.C.சந்திரசேகரன் அவா்கள் நன்றியுரை வழங்கினார். WCSC-R&D Dr.M.V.ரபீந்திரநாத் B.Sc.,M.D., அவா்கள், கரிவலம்வந்தநல்லூர் பேரா.Dr. S..பால்துரை M.B.B.S.,D.L.O., மற்றும் Cognitive Phychologist& Counsellor திரு.M.K.ஜானகிராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
முழுமை நல வாழ்விற்கான மனவளக் கலைப் பயிற்சிகள் கிராம மக்கள் அனைவருக்கும் தொடா்ந்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் முலம் கிராம மக்கள் உடற்பயிற்சி, காயகல்பம், துரியம், முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் அகத்தாய்வு பயிற்சிகள் மற்றும் பிரம்மஞான பயிற்சிகள் வரை பயின்று பலன் அடைந்தார்கள்.
நிறைவு விழா